தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருப்பார். கணவன் மனைவிக்கு இடையேயான குடும்பச் சண்டை, பாசம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தலைவன் தலைவி படத்தை எழுதி இயக்கியவர் இயக்குனர் பாண்டிராஜ் ஆவார். 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் தொடங்கி மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் என பல படங்களை பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் பாண்டிராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியின் போது அவரிடம் தலைவன் தலைவி படத்தின் வெற்றியை கொண்டாடினாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாண்டிராஜ் "நான் எந்த வெற்றியையும் கொண்டாடவில்லை. படம் வெளியானதை தொடர்ந்து பலரும் என்னிடம் திரையரங்கிற்கு சென்று வெற்றியை கொண்...
ஆந்திர பிரதேஷ் மாநிலம் விசாகப்பட்டினம் துவாரபுடி பகுதியில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் ஒன்று சரியாக லாக் ஆகாமல் இருந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை பார்த்து காரின் உள்ளே ஏறி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் தவறுதலாக காரை உள்ளிருந்து லாக் செய்து விட்டனர். இதனால் காரின் உள்ளே சிக்கிய சிறுவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. வெகு நேரமாக மூச்சு விட முடியாமல் போராடிய சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு சிறுவர்களும் 6லிருந்து 8 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. காரின் உரிமையாளர் சரியாக காரை லாக் செய்யாதது தான் இத்தகைய சோக சம்பவம் நடந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.